பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்! காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு ராணுவ சிறப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை எடுத்து பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பகுதியில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.

இந்த மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two soldiers martyred in a gunfight between terrorists and soldiers in Kashmir


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->