அதிமுகவுக்கு பேரிடி: கட்சி தாவுவது சகஜம்! அப்பாவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வின் ஆர்.எம். பாபுமுருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் போது, நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், "ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவது ஒரு சாதாரண நிகழ்வு. 

நமது ஜனநாயகத்திலும் சட்டத்திலும் இது அனுமதிக்கப்பட்டது. அதனால், இதற்கு அவதூறு என்ற மூல காரணம் இல்லை" என்று தெரிவித்தனர். 

மனுதாரர் கேள்விகளை அடிப்படையாகக் கொண்ட வழக்கில், மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்யும் நிலைப்பாட்டில் நீதிபதிகள் இருந்தனர். 

இதற்கிடையில், மனுதாரர் மனுவை வாபஸ் பெற விருப்பம் தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கி, அப்பாவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Appauvu case ADMK DMK SC Order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->