அறிவு கெட்ட சமூக விரோதிகள் - விசிக திருமாவளவனுக்கு நெத்தியடி கொடுத்த அறப்போர் இயக்கம்!
Arappor Iyakkam Condemn to VCK Thirumavalavan
அறப்போர் இயக்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பதிவில், "ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது அவர்கள் செல்லும் இடமெல்லாம் நடைபாதைகளை, சாலைகளை மற்றும் அங்கிருக்கும் வீட்டு வாசல்களையும் அடைத்து பேனர் வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது.
2015ம் வருடம் டிசம்பர் மாத இறுதியில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர இருந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று சாலை நடைபாதைகளை அடைத்து வைக்கப்பட்ட பேனர்களை காவல்துறையில் புகார் அளித்தும் அகற்றாததால், அறப்போர் இயக்கத்தினர் ஆபத்தான பேனர்களை அகற்றி ஓரமாக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அதிமுக குண்டர்களால் தாக்கப்பட்டு, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த கைதை கண்டித்தும், சாலை நடைபாதைகளில் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைப்பதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் 2016ம் ஆண்டு ஜனவரி 02ம் நாள் வெளியிட்ட வீடியோவை இங்கே காணலாம்.
கூடவே இன்று வடபழனி முழுவதும் சாலை நடைபாதைகளை அடைத்து அவருடைய கட்சியினர் அவருக்காக வைத்துள்ள விளம்பர பேனர்களையும் காணலாம்.
இது போல சாலைகளிலும் நடைபாதைகளிலும் பேனர் வைத்து அடைத்து மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படுத்துபவர்கள் அறிவு கெட்ட சமூக விரோதிகள் என்பதில் எங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
உங்களுக்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நீங்கள் பேசிய காணொளியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. வீடியோவில் நீங்கள் பேசிய விஷயங்களை நீங்களே கேட்டு தெரிந்து கொண்டு நீங்கள் சொன்னதை செயல்படுத்த கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
English Summary
Arappor Iyakkam Condemn to VCK Thirumavalavan