சந்திரபாபுவுக்கு ஹவுஸ் அரஸ்ட் கிடையாது! ஜாமின் மனுவும் தள்ளுபடி! நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி வகித்த போது ஆந்திர மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் ரூபாய் 118 கோடி லஞ்சம் பெற்றதாக ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கின் அடிப்படையில் ஆந்திர மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது.

அதன் அடிப்படையில் அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறையில் சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், வயது முதிர்வை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டது.

அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களும் 72 மணி நேரத்திற்கு மேலாக வீட்டுக்காவளையில் வைக்கப்பட்டுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrababu Naidu bail plea dismissed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->