ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் - ஏ.ஸ்டாலின் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்!
Chennai DMK A Stalin Suspended
ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார்.
திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி 144வது வட்ட செயலாளரும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருமான ஸ்டாலின் மீது ஒரு ஊழல் மற்றும் மிரட்டல் புகார் எழுந்தது.
அதன்படி, குடிநீர், கழிவுநீர் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கவுன்சிலர் ஸ்டாலின் மீது ஒப்பந்ததாரர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Chennai DMK A Stalin Suspended