வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள் - பயணிகளுக்கு விமான நிறுவனம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


லெபனான் நாட்டில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அதற்கு மறுநாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது. 

இந்த இரண்டு சம்பவங்களிலும் சுமார் 37 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

emirates flight company ban passengers not came walkie talkie in flight


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->