இதை பெரிய பிரச்னையாக்கிட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!  - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’ கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயிற்சி பெற்று சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்களை 2வது முறை சரி செய்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாட வைத்தார் என்றும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி தெரிவிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடவில்லை. மைக் சிறிது நேரம் வேலை செய்யவில்லை.

அதனால் தான் இரண்டாவது முறையாக முதலில் இருந்து பாட அறிவுறுத்தினேன். இதை ஒரு பெரிய பிரச்னையாக்கிட வேண்டாம்" என்று தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deputy CM Udhayanidhi Stalin Tamil Thai Valathu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->