திருமாவளவன் "உள் சாதி உணர்வோடு" திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார் - ஜக்கையன் பேட்டி!
DMK VCK Thirumavalavan SC Reservation Jakkaiyan Madurai
பொதுத் தலைவராக வந்து வந்த பிறகும், திருமாவளவன் "உள் சாதி உணர்வோடு" திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார் என்று மதுரையில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் பேட்டி அளித்துள்ளார்.
அவரின் அந்த பேட்டியில், "அருந்ததியர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அருந்ததியர் மக்களின் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், உறுதுணையாக இருந்த கட்சிகளுக்கு நன்றி. அரசாணை 61ஐ தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். அருந்ததியர் இடஒதுக்கீடு அருந்ததியர் மக்களுக்கே செல்ல வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
‘Most Scheduled Caste’ என்கிற பிரிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பில் ‘கிரிமி லேயர்’ பற்றி கூறப்பட்ட தகவல்களை விசிக தலைவர் திருமாவளவன் மிகைப்படுத்தி பேசியுள்ளார். பொதுத் தலைவராக வந்து வந்த பிறகும், திருமாவளவன் "உள் சாதி உணர்வோடு" திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.
திமுக கூட்டணியில் விசிகவை தவிர சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அருந்ததியர் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள்.
அருந்ததியர் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 6% உயர்த்தி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். அருந்ததியர் இடஒதுக்கீட்டில் முறைகேடாக பணிக்கு சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK VCK Thirumavalavan SC Reservation Jakkaiyan Madurai