தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. வெளியான பரபரப்பு தகவல்.!!
Info Tamil Nadu cabinet reshuffle after loksabha election result
தமிழ்நாட்டில் கடந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி ஒரே கட்டமாக எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதை வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்த திமுக இந்த தேர்தலில் ஒரு சில தொகுதிகளை இழக்க நேரிடும் என தேர்தலுக்குப் பின்பு பரவலாக பேசப்படுகிறது.
பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில் மக்களவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த பிறகு சரியாக செயல்படாத அமைச்சர்களின் நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிக்க முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பல அமைச்சர்கள் தங்கள் பதவி பறிக்கப்படுமோ என்ற கலக்கத்தில் இருப்பதாக உடன்பிறப்புகள் முனுமுனுக்கின்றனர்.
English Summary
Info Tamil Nadu cabinet reshuffle after loksabha election result