எனக்கு சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்ல.!! - நரேந்திர மோடி பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 13 தொகுதிகளிலும், AJSU கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. 

இந்நிலையில் பாஜக‌ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை‌ ஆதரித்து ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் "மக்கள் அனைவரும் தங்கள் வாக்கின் மதிப்பை உணர வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து ஊழல் காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டுள்ளது.

எனக்கு சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லை. ஆனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்காக ஊழல் செய்து பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர்.

நீங்கள் அனைவரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் பேரப் பிள்ளைகளும் தான் என் வாரிசுகள். அவர்களுக்கு வளமான இந்தியாவை கட்டியெழுப்பி அளிப்பதே என் இலக்கு. கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை" என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi pride he don't have own cycle


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->