எங்கள் அரசு அதானிகளுக்கானது அல்ல, மக்களுக்கானது - ராகுல் காந்தி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குப்பதிவுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களில் இரண்டுகட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், வரும் மே- 7 தேதி மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறயுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மற்றும் காங்கிரசை தலைவர்களுக்கிடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதிக்கீட்டை கொண்டு வரும் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்த நிலையில், ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் மோடியை விமரிசித்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,

இடஒதிக்கீடுதான் மோடியின் பிரச்சார மந்திரம். மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்காது. அதாவது அரசு வேலை இல்லையென்றால் இடஒதிக்கீடு கிடைக்காது என்பதாகும். நாட்டை கொள்ளையடிக்கும் மோடியின் மாடல் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் இடஒதிக்கீடு பறிபோகிறது.எங்கள் அரசு அதானிகளுக்கானது அல்ல, மக்களுக்கானது என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Our Government is not for Adhanis the people Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->