விஜய் அண்ணாக்கு..... பா.ரஞ்சித் போட்ட பரபரப்பு டிவிட்!  - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாடு அனைத்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் கொள்கை தலைவர்களாக காமராஜர், பெரியார், அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் இருப்பார்கள் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் நடிகர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! 

"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு " மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pa Ranjith wish to Tamilaga Vettri Kazhagam vijay


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->