கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி!....ஆத்திரத்தில் டிவியை உடைத்த தொண்டரால் பரபரப்பு!.... - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர் தேர்தல் முடிவுகளும், கேரளா, உத்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டது.

அந்த வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னபட்டணா, சிக்காவி மற்றும் சண்டூர் ஆகிய சட்டசபை  தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில்,  இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில், விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த வீரபத்ரப்பா என்ற பாஜக தொண்டர், நேற்று டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்து கொண்டிருந்த போது 3 தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வியடைந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் டிவியை வீட்டிற்கு வெளியே சாலையில்  தூக்கி போட்டு உடைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bjp massive defeat in karnataka elections the volunteer who broke the tv in anger caused a sensation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->