சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி வேட்பாளர் அன்னியூர் சிவா..!! - Seithipunal
Seithipunal



முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் விக்கிரவாண்டி வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவா. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி,  கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த ஜூன் 10ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி மக்களைவைத் தேர்தல் நடந்து முடிந்து அதன் முடிவுகள் வெளியான பிறகு கடந்த ஜூன்  10 ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து அங்கு நேற்று (ஜூன் 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியானது.

இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரைத் தொடர்நது இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளார். 


இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு இன்று நேரில் சென்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார். மேலும் அன்னியூர் சிவாவைத் தொடர்ந்து அமைச்சர்களும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vikravandi Candidate Anniyur Siva Met CM Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->