புரோ கபடி லீக்! இன்று மாலை அரை இறுதி ஆட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடைபெற உள்ளன.

எட்டாவது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பாட்னா மற்றும் டெல்லி அணிகள் நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

அடுத்த 4 இடங்களைப் பிடித்த உத்திர பிரதேசம், குஜராத், பெங்களூர் மற்றும் புனே ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றில் உத்திர பிரதேச அணியும், புனே அணியும் மோதிய ஆட்டத்தில் உத்திர பிரதேச அணி 42 - 31 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு பிளே ஆப் ஆட்டத்தில் குஜராத் அணியும், பெங்களூரு அணியும் நேரடியாக களம் கண்டன. இதில் அதிரடியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 49 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா அணியுடன் உத்திர பிரதேச அணியும், 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரை இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro Kabbadi semi finals


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->