#T20WorldCup : இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்.. கோப்பை யாருக்கு.? - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரண் 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இதில், வெற்றி பெறும் அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும்.

 இவ்விரு தலா ஒரு முறை டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அந்த வகையில் 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணியும், 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது. இன்றைய தினம் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இவ்விரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

T20 World Cup final Pakistan target of 138 runs against England


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->