நடுரோட்டில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள் - இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
500 money on road in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் நேற்று தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி பறந்து நெடுஞ்சாலையில் விழுந்துள்ளது.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போட்டி போட்டு சாலையில் கிடந்த பணத்தை அள்ளி சென்றனர். இது தொடர்பான காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த 500 ரூபாய் நோட்டுகள் அவ்வழியாக சென்ற வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததா? அல்லது வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பணம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தாலும் பொதுமக்களால் அள்ளி செல்லப்பட்ட பணத்தை மீட்க முடியுமா? என்பதும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலையில் சிதறிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்பதும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். உசிலம்பட்டியில் சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
500 money on road in madurai