சோகம்! விக்கிரவாண்டி அருகே 6 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி!
6 cows were electrocuted while grazing near Vikravandi
விக்கிரவாண்டி அருகே மேய்ச்சலுக்கு சென்ற 6 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவமும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி அருகே உள்ள தென்பெர் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். அவரது மனைவி ஜெயலட்சுமி இவர் காலை மெய்ச்சலுக்காக தனது 11 மாடுகளை கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் மாடுகளை மேய விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி உயிரழுத்த மின் கம்பிகள் அருந்து விழுந்து உள்ளது. மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின் கம்பிகளை மேய்ந்து கொண்டிருந்த 6 மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே 6 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியை சென்றவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாடுகளின் உரிமையாளர் நாகப்பன் அவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரிய தச்சூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இறந்து கிடந்த பசு மாடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மின்வாரிய ஊழியர்கள் வரவைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து இறந்த மாடுகளை உடர்கூர்ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
6 cows were electrocuted while grazing near Vikravandi