கோவை அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த காவலாளி.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த காவலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன் (67). இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் கோபித்துக் கொண்டு கோவையில் உள்ள சிங்காநல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரவு பணி முடிந்து காலையில் வீட்டிற்கு வந்தார். பின்பு இரண்டு நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்தத அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாமோதரன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A watchman lying rotting inside the house in kovai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->