பெண்களுக்கு திருமணம் தேவைதானா? பிரபல தமிழ் நடிகை சர்ச்சை பதிவு! - Seithipunal
Seithipunal


எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அதிக அறிமுகமானவர் நடிகை பாமா. 

அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதை காட்டிய நடிகை பாமா, கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் கடந்த மே மாதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை பாமா இனி நான் சிங்கிள் மதர் என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் அவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

மேலும் நடிகை பாமா வெளியிட்ட மற்றொரு பதிவு சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அவரின் அந்த பதிவில் பெண்களுக்கு திருமணம் தேவைதானா? வேண்டாம்... உங்களின் பணத்தை கொடுத்து யாரும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். உங்களை திருமணம் செய்து கொள்ளும் கணவன் உங்களை விட்டு பிரிந்தால், கைவிட்டு விட்டால் உங்கள் நிலைமை என்ன ஆகும்?

உங்கள் பணத்தையும் பறிகொடுத்து உங்களையும் தற்கொலை செய்ய தூண்டுவார்கள். உங்கள் வாழ்க்கை துணை, உங்கள் வாழ்க்கையில் உள்ளே வருபவர் எப்படி நடந்து கொள்வார் என்பது தெரியாமல் எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நடிகை பாமா பதிவிட்டு இருந்தார்.

 இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாகிய நிலையில், இது குறித்து நடிகை பாமா தற்போது விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், வரதட்சனை உள்ளிட்ட எந்த பொருளும் கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் பெண்களை சொன்னேன். ஆனால் பெண்களை யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நான் சொல்லவே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Bhama say about women marriage


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->