தொடரும் வெடிகுண்டு மிரட்டல் ..திணறும் போலீசார்!
Bomb threat continues Cops are struggling
கடந்த வாரம் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் இல்லம் மற்றும் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் இன்று மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதும் பின்னர் அது புரளி என தகவல் வருவதும் வாடிக்கையாக உள்ளது புதுச்சேரியில் பொதுமக்கள் மத்தியில் பீதியையும், அம்சத்தையும் ஏற்டுத்தி உள்ளது .
மேலும் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை யார் என கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இந்தநிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இமெயிலில் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.
இதையடுத்து இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றுடன் சோதனை நடந்தது. இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது. இதற்கான கணபதி ஹோமம் இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்தது.அப்போது ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக ஆளுநர் மாளிகையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bomb threat continues Cops are struggling