ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிப்பது தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.! - Seithipunal
Seithipunal


ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் அனுபவிப்பது தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் யாசுதீன் என்பவர் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆயுள் தணடை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருப்பது தான் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும், ஆயுள் தண்டனை பெற்ற கைதியை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என ஆளுநருக்கு உத்தரவிட முடியாது தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai high court about lifetime imprisonment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->