சென்னை: வேளச்சேரி பகுதிகளில் இடுப்பளவுக்கு மழை நீர்! - Seithipunal
Seithipunal


சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் வேளச்சேரி பகுதிகளில் இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேளச்சேரியின் நேரு நகர், காமராஜர் தெரு, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிப்பதாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்கள் பாதி அளவுக்கு மேல் மூழ்கும் சூழலில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அந்த பகுதியில் தாழ்வான குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், குறிப்பாக நேரு நகர், காமராஜர் தெருவில் இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதேபோல் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மேடவாக்கம் பிரதான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Velacherry Heavy Rain Flood


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->