வருகிற 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் கடந்த 1756 ஏப்ரல் 17ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், இளம் வயதிலேயே வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பல போர்க்கலைகளை கற்றுக்கொண்டார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டு போராடினார். 

பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள், ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் சங்ககிரிக் கோட்டையில் கடந்த 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி அன்று தூக்கிலிட்டனர்.

இத்தகைய புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாள் வருகிற 3.8.2024ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming augest 3 local holiday in tirupur district for dheeran sinnamalai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->