மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கிரிக்கெட் பயிற்சியாளர் - உ.பியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் பாங்கி பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் அங்குள்ள நியூ ஸ்டார் அகாடமிக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

அங்கு பயிற்சியாளராக இருந்த நீரஜ் வர்மா என்பவர், சிறுமிக்கு பயிற்சிக் குறிப்புகள் என்ற பெயரில், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, காபியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கடந்த இரணடு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததுள்ளார்.

இதற்கு சிறுமி எதிர்ப்புத் தெரிவித்ததும் அந்த பயிற்சியாளர் கொலை மிரட்டல் விடுத்தும், சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியும் உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தன் குடும்பத்தாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பாங்கி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் மீது போக்ஸோ மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cricket coach harassment to student in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->