கடலூர்: நாடக காதலனால் சீரழிக்கப்பட்ட 17 வயது சிறுமி! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அவரின் உறவுக்காரரான கடலூரை சேர்ந்த திருமாறன் என்பவர், நாடக காதல் மூலம் பழகி, ஏமாற்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கி உள்ளார். 

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றம் புதுச்சேரி நீதிமன்றம் விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பின்படி, இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையயும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணமாக நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று, இந்த தீர்ப்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore thirumaran case judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->