மக்களே மகிழ்ச்சியான செய்தி : ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி  கிடைக்கும்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு : ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தடையின்றி  கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை. ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இன்னும் வந்து சேரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

இதனை அடுத்து ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தங்கு தடையின்றி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம் :

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி டெண்டர் போடுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாகவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மே மாதம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாதவர்கள் மற்றும் இந்த மாதம் பெற வேண்டியதையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.  மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் இறுதி வாரம் பெற்றுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்ட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Duaram dal and palm oil are available in ration shops without restriction


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->