கோவில் திருவிழாவிற்கு மின்விளக்கு கட்டிய எலக்ட்ரீசியன்.. மின்சாரம் பாய்ந்து பலி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் திருவிழாவிற்கு மின்விளக்கு கட்டியபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெங்கடேஸ்வராபுரம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அப்பனசாமி (32). இவர் நேற்று முன்தினம் இரவு மாவிலோடையில் ஒரு கோவில் திருவிழாவிற்கு மின்விளக்கு கட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அப்பனசாமி மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அப்பனசாமி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காடல்குடி காவல்துறையினர் உயிரிழந்த அப்பணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electrician killed by electrocution in Thoothukudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->