ரொம்ப மன சங்கடமா இருக்கு... அடுத்தவர்களை நம்ப கூடாது... - வைரலாகும் ஜி.பி.முத்து பதிவு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக் டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானார். 

திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசுவதால் அதிகம் கவரப்பட்ட இவர் சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை, பெரிய திரையில் நடித்துவரும் ஜி.பி. முத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தெரிவித்திருப்பதாவது, நண்பர்களே நான் அப்படியே குலசை கடற்கரைக்கு வந்தேன். ஏன்னு கேட்டீங்கன்னா நிம்மதியே இல்லை. 

ரொம்ப மன சங்கடமா இருக்கு. அடுத்தவங்களை நம்பி எதுவும் செய்யக்கூடாது. எனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் செய்ய வேண்டும். 

அடுத்தவங்க இருக்காங்க அவங்க வைக்கிறாங்கன்னு யார் சொல்றதையும் கேட்கக் கூடாது. இன்னைக்கு ஒரு சின்ன விஷயம் நடந்தது. அது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. 

அதை நானே பேசி முடித்து விட்டேன். அனைவரும் உங்களுக்கு என்ன தோணுதோ அதை மட்டும் செய்யுங்கள் என வீடியோவில் தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் ஜி.பி. முத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் மன வருத்தப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GP Muthu post viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->