கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தனது நண்பர்களுக்கு அதனை விற்க முயற்சித்த இளைஞர் ஒருவரை, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிகோடு காவல் நிலைய போலீசார் தலைமையில் குமாரபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தனது சக நண்பர்களிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala to tamilnadu ganja smuggling april


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->