அதிரடி காட்டும் எடப்பாடி! நேரடி மக்கள் சந்திப்பு! போதைப் பொருள் குறித்து துண்டு பிரசுரங்கள்!
Leader of Opposition took out leaflets to spread propaganda about drugs
போதைப் பொருள் குறித்து பிரச்சாரம் செய்யும் வகையில் துண்டு பிரசுரங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வழங்கினார்.
தமிழகத்தில் சட்ட வழங்கு சீர்குலைந்து விட்டது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், ராமநாதபுரம் பரமக்குடி அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார் மற்றும் விவி ராஜன் செல்லப்பா சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியின் போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிமுக சார்பில் கொள்ளை,கொலை, போதை பொருள் குறித்த பிரச்சாரம் செய்யும் வகையில் துண்டு பிரசுரங்களை எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களிடம் வழங்கினார்.
அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருள் கடத்தப்பட்ட மாதங்கள் அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என அதில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
English Summary
Leader of Opposition took out leaflets to spread propaganda about drugs