திருப்பூரில் பதற்றம்! தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி படுகொலை! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் அருகில் உள்ள கருமஞ்சிரை பகுதியில் டாஸ்மார்க் கடை இறங்கி வருகிறது. அதன் அருகில் உள்ள புதர் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் பலத்தகாயதுடன் பிணமாக கிடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருப்பூர் சிவன் தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பதும் அவர் பகுதியில் கட்டிடம் மேஸ்திரி ஆக வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், காவல்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரை யார் கொன்றார்கள்? எதற்காக அவர் குன்னத்தூர் வந்தார்? டாஸ்மார்க் அருகில் கொலை செய்யப்பட்டு இருப்பதால் குடிபோதையில் ஏற்பட்ட தகராதில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mason was killed by a stone on his head near Tirupur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->