கைது நடவடிக்கையா..? மனைவியுடன் தலைமறைவான எம்.எல்.ஏ. மகன்!
MLA Son absconding with his wife
பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கு விவகாரத்தில் தனது மனைவியுடன் எம்.எல்.ஏ மகன் தலை மறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் மற்றும் மருமகள் திருவான்மியூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா (18 வயது) என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணியாற்றி வந்தார்.
![](https://img.seithipunal.com/media/IMG_20240119_122037-vrvrj.jpg)
ரேகா, வேலைக்கு சேர்ந்த ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்தரவதை செய்ததாகவும் 15000 ரூபாய் சம்பளம் தருவதாக தெரிவித்து 5000 கொடுத்து பல்வேறு பிரச்சனைகள் செய்ததாக வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார்.
இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகன் மற்றும் மருமகள் தங்களை கைது செய்ய கூடும் என தலைமறைவானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
MLA Son absconding with his wife