பதற்றம்! கடலூர் பாமக பிரமுகர் கொலை முயற்சி வழக்கு! 4 முக்கிய புள்ளி கைது!
Police arrested 4 people who attempted to hack and kill the Cuddalore
கடலூர் பாமக பிரமுகரை வெட்டி கொலை செய்ய முயன்ற 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் திருப்பாதிபுலியூர் என்.எஸ் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கன் மகன் சங்கர். பாமக பிரமுகர் ஆன இவர் நேற்று தனது மனைவி உடன் வீட்டு முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடலூரில் பாமக பிரமுகர் அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
படுகாயம் அடைந்த பாமக பிரமுகர் சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையின் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பாமக பிரமுகர் சங்கர், விஜய், பிரபு ஆகியோருக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சங்கரின் தம்பி பிரபுவை சதிஷ், வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கடந்த 28.2.2021 ஆம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும் வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவர் மீது விரோதம் கொண்ட சதீஷ் வெங்கடேசன் ஆகியோர் சங்கரை கத்தியால் வெட்டிக்கொள்ள முயன்றது தெரிய வந்தது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சங்கரை அறிவாளால் வெடி தப்பி ஓடிய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Police arrested 4 people who attempted to hack and kill the Cuddalore