#அரியலூர் || தலையில் கல்லை போட்டு நசுக்கி, 11 ஆம் வகுப்பு மாணவன் படுகொலை.! - Seithipunal
Seithipunal


ஜெயங்கொண்டம் அருகே பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தலை நசுக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்-லலிதா தம்பதி. இந்த தம்பதிக்கு 16 வயதான முருகன், மணிகண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.  

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு லலிதா உடல்நலக்குறைவால் இறந்துவிட்வே, மதியழகன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஊரை விட்டு தலைமறைவானர்.

இதன்காரணமாக மகன்கள் இரண்டு பேரில் ஒருவர் பெரியம்மா வீட்டிலும், மற்றொரு மகனான மணிகண்டன் பொற்பதிந்தநல்லூரில் உள்ள பாட்டி பாப்பாத்தி பாதுகாப்பில் இருந்து கொண்டு, அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மணிகண்டன் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வுக்காக மணிகண்டன் இன்று காலை கிளம்பாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாப்பாத்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக இறந்து கிடந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மணிகண்டனை கொலை செய்தது யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

porpothintha nallur school student murder case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->