புதிய கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள் - திருச்சியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ளது "லால் சலாம்" திரைப்படம். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த "லால் சலாம்" திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 

அதில், திருச்சியில் மட்டும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் புதிதாக ஒரு கொடியுடன் வந்துள்ளனர்.

சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களுடன் இருந்த அந்தக் கொடியில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா உருவமும், "சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்" என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு கொடியை பயன்படுத்தி வரும் நிலையில் புதிதாக ஒரு கொடியை ரசிகர்கள் எடுத்து வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajini fans come with new flag in trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->