தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ. 12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்.!
Red sandal wood seized
தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்ட ரூபாய் 12 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு இரும்பு குழாய் அடியில் வைத்து லாரியில் கடத்தி சென்ற ரூபாய் 12 கோடி மதிப்பிலான 7 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த கடத்தல் குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.