சவுக்கு சங்கர் வழக்கில் அதிரடி திருப்பம்! நாள் குறித்த உச்சநீதிமன்றம்! உறுதியானது அந்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு எதிரான 16 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்ற விவரத்தை இன்று தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேபோல், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தது ஏன் என்றும், சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகளும் ஒரே பேட்டிக்காக போடப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்று பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குதமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, என்றும், சென்னை சிறையில் படிப்பதற்கு போதுமான அளவு புத்தகங்கள் இருப்பதாகவும், எனவே அதனை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து தன்னை சென்னை சிறைக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

savukku sankar case Sc order Sep 30 DMK MKStalin TNGovt Udhay


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->