கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் - அன்றே சொன்னாரா சவுக்கு சங்கர்?! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே கள்ளச் சாராய விற்பனை நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் உயர் அதிகாரிகள்  மற்றும் போலீஸ் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி வெளிப்படையாக காவல் நிலையம் அருகிலேயே கள்ளச் சாராய விற்பனை சாத்தியமில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும் தற்போது சிறையில் இருக்கும் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் வெகு சில மாதங்களுக்கு முன்பே, கள்ளக்குறிச்சியில் நடைபெறும் கள்ளச் சாராய விற்பனையில் திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "திமுகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன் தான் ஆதரவாக இருக்கிறார்.

மேலும் ரிஷிவந்தியம் தொகுதியிலும் கள்ளச் சாராயம் காய்ச்சப் படுகிறது. இந்த கள்ளச் சாராய சாவுகளுக்கெல்லாம் மூல காரணமே செந்தில் பாலாஜி தான் " என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தற்போது சவுக்கு சங்கர் சிறையில் இருக்கும் நிலையில், அவர் முன்பு எப்போதோ கூறிய இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Sankar Says About Kallakurichi Hooch Sales


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->