#Breaking_News : தமிழகத்தில் உதயமாகிறது புதிய மாவட்டம்.! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசி உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிய தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்லையில் இருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக கூட்டப்படுகிறது.

சோழப் பேரரசில் தலைநகராக விளங்கிய கும்பகோணம் தற்போது தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ளது. ஆனால் நீதிமன்றங்கள், வணிகவரித்துறை, அரசு மருத்துவமனை, வருவாய்துறை  உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் கும்பகோணத்தில் உள்ளன.

புதிய மாவட்டம் அமைக்க பின்பற்றப்படும் விதிகளின்படி வருவாய் பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் உள்ளதால் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்தது குறிப்படத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu new district in tenkasi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->