தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் வருகின்ற இருபதாம் தேதி (நாளை மறுநாள்) அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தற்போது வரை இரு கட்டங்களாக நடைபெற்று உள்ளது..

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் இந்த பணியினை ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொண்டனர். 

இரண்டு நாள் ரேஷன் கடை பணியாளர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை ஈடுகட்டும் வகையில், இந்த இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும்படியாக கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த மாதம் 20ஆம் தேதி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு நான் வருகின்ற 20-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Ration shop July 20 holiday


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->