தீபாவளி போனஸ் எப்போது? - அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தீபாவளி பாண்டியை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் தமிழக அரசு தற்போது போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் பெறுவார்கள். இந்த போனஸ் அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி கருணைத் தொகையாக வழங்கப்படும். 

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government annaounce deepawali bonus to employees


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->