மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, முகப்பேரு பகுதியில் உள்ள பள்ளியில் அங்குள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் வேதியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக  அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பெயரில் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் அனுப்பிய வாட்ஸ் அப் வீடியோ , ஆடியோக்களை ஆதாரமாக வைத்து ஸ்ரீதரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrasted who sexually abused Student in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->