ஆசிரியரை தீ வைத்துக் கொளுத்திய முன்னாள் காதலன் - உ.பியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இளம் பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன் படி வருகிற மார்ச் மாதம் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்தத் தகவலை அறிந்த அவரது முன்னாள் காதலன் பள்ளிக்கு செல்லும் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார். 

பின்னர் தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை அந்த பெண் ஆசிரியர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த தீ விபத்து சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் காதலனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

teacher died for fire accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->