சேலம் || 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு.! உயிருடன் மீட்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுவை உயிருடன் மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அண்ணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது பசுமாடு 60 அடி ஆழ விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து உள்ளது.

இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பின்பு பசுமாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக பசுமாடு உயிர்தப்பி உள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The cow that fell into the well was rescued alive


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->