இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..அடுத்தடுத்து உயரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை.! - Seithipunal
Seithipunal


சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சரக்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தமிழக சுங்கச்சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. அறியாத சில வாகன ஓட்டுனர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today toolgate fees increased


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->