சென்னையில் காலையிலேயே சோகம்!...டிரேடிங்கில் ரூ.1 கோடி நஷ்டமடைந்த எல்.ஐ.சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை! - Seithipunal
Seithipunal


சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனதாக கூறப்படும் நிலையில், இவருக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. வினோத் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வந்து உள்ளார்.

மேலும் இவர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் டிரேடிங்கில் தனது சொந்த பணத்தினை போட்டு முதலீடு செய்துள்ளார்.

அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தொடர்ந்து தனது உறவினர் நண்பர்களிடமிருந்து கடன் பெற்று சுமார் ரூ.1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் ஆன்லைன் டிரேடிங்கில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து கடன் பிரச்சினையில் வினோத் சிக்கி உள்ளார். இதனால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கடனை அடைத்தாலும் ஒரு சிலருக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் நெருக்கடியில் சிக்கி தவித்து வந்துள்ளார்.

இதனால் பெரும்  மன உளைச்சலுக்கு ஆளான வினோத், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், வினோத்தின் உடலை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in chennai early in the morning lic employee who lost Rs 1 crore in trading hanged himself


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->