மும்பையில் பயங்கர தீ விபத்து!...குடியிருப்பு கட்டிடத்தில் 7 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் செம்பூர் பகுதி அருகே உள்ள சித்தார்த் காலனியில் கடையுடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து,  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் வீட்டில் இருந்த 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருந்த போதிலும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  அவர்கள் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடை ஒன்றில் மின் வயரிங் மற்றும் பொருட்களில் முதலில் தீப்பற்றியதாகவும், அதனைத் தொடர்ந்து தீ அதிகமாக பற்றி எரிந்து மேலே உள்ள வீட்டுக்கு தீ பரவியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible fire accident in mumbai seven people died in a residential building


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->