திருச்சி: இரட்டை கொலை, பெட்ரோல் குண்டு வீச்சு - அடுத்தடுத்த சம்பவங்கள்! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே இரட்டை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஒருவர் சரண் அடைந்திருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த அந்தரப்பட்டியில் இரட்டைக் கொலையை செய்துவிட்டு பாலச்சந்திரன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கீதா மற்றும் ரமேஷ் என்பவரை கொலை செய்த பாலச்சந்திரன், இன்று காவல் நிலையத்தில் நான் தான் கொலை செய்ததாக சரணடைந்துள்ளார்.

அந்தரப்பட்டியில் உள்ள கீதாவை முதலில் கொலை செய்துவிட்டு, ஜம்புநாதபுரத்தில் ரமேஷ் என்பவரையும் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே திருச்சி, முசிறி தொட்டியம் பகுதியில் பைனான்சியர் ராம்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் டிஎஸ்பி தலைமையிலான போலீசார், தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் நெப்போலியன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி நேற்று இரவு கொல்லப்பட்டார். 

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வினோத் (வயது 30), நேற்று இரவு 09:00 மணியளவில் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது தாய் முன்பே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 

சுள்ளான் ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்த வினோத் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy 3 murder case in one night


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->