கலவை எந்திரத்தில் சிக்கி கணவர் முன்னே மனைவி பலி!!
Wife killed in front of husband caught in mixing machine
ஈரோடு பெரியசிவூர் எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் காங்கிரீட் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. நேற்று இந்த பணியில் பவானி அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் அவருடைய மனைவி சரஸ்வதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
சரஸ்வதி ஜல்லிக்கற்களை கலவை இயந்திரத்தில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கலவை இயந்திரத்தில் சிக்கி உடல் சிதைந்த நிலையில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கிருந்து அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Wife killed in front of husband caught in mixing machine